TNCSC அரசு வேலைவாய்ப்பு – 1000+ காலிப்பணியிடங்கள்! முழு விபரம் இதோ!
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் (TNCSC) திருவாவூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலியாக இருக்கும் கிளார்க், அசிஸ்டண்ட் ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த பதவிகளுக்கான கல்வித்தகுதி, காலியிட விவரங்களை இப்பதிவில் காணலாம்.
அரசு வேலைவாய்ப்பு
தமிழக அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் அனைத்து பணியிடங்களுக்கும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு அலுவலகங்களில் கிளார்க், அசிஸ்டண்ட், செக்யூரிட்டி உள்ளிட்ட பணியிடங்களுக்கு தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் (TNCSC) மூலம் வேலைவாய்ப்பு செயல்முறைகள் நடத்தப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் திருவாவூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலியாக இருக்கும் சில பணியிடங்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் (TNCSC) அறிவித்துள்ள ரெக்கார்டு கிளார்க், அசிஸ்டண்ட், செக்யூரிட்டி மற்றும் வாட்ச்மேன் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, ரெக்கார்ட் கிளார்க் பணியில் 110 காலியிடங்கள் இருக்கும் நிலையில் அறிவியல் பிரிவில் B.sc முடித்த பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அது போல 107 உதவியாளர் பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் 146 வாட்ச்மேன் பணிகளுக்கு 8ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பங்களை செலுத்தலாம்.
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் மாதிரி வினாத்தாள்!
இப்பதவிகளுக்கான வயது வரம்பு 01-07-2022 நிலவரப்படி 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். இப்போது, OC விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆண்டுகள் ஆகும். அதே போல MBC/ BC/ BC(M) விண்ணப்பதாரர்களுக்கு 34, SC/ ST/ SC (A) விண்ணப்பதாரர்களுக்கு 37 என அதிகபட்ச வயது வரம்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு 13-07-2022 மாலை 5 மணி வரைக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. TNCSC அறிவித்துள்ள கடலூர் மாவட்ட வேலைவாய்ப்புகளை பொருத்தளவு, 110 ரெக்கார்ட் கிளார்க் பணிக்கு அறிவியல் பிரிவில் B.sc முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
அது போல 107 உதவியாளர் பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் 146 வாட்ச்மேன் பணிகளுக்கு 8ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பங்களை செலுத்தலாம். தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்புகளை பொருத்தளவு 100 பதிவு எழுத்தர் பதவிக்கு விவசாயம் அல்லது பொறியியலில் இளங்கலை அறிவியல் பட்டம் அவசியம். அதே போல 74 உதவியாளர் பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் 32 வாட்ச்மேன் பணிகளுக்கு 8ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பங்களை செலுத்தலாம். இந்த அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, அதிகபட்ச வயது வரம்பு ஆகியவை மேலே குறிப்பிட்ட விவரங்களுடன் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.