தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
தமிழகத்தில் இன்று (ஜூலை 3) 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் நீலகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (ஜூலை 3) கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கி விட்ட நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்கள் திறப்பு? எதிர்பார்ப்பு!
அதன்படி தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை, விருதுநகர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 12 மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. வரும் ஜூலை 4ம் தேதி அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
TN Job “FB Group” Join Now
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.