தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்கள் திறப்பு? எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் நேற்று கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 12 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் திரை அரங்குகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
திரை அரங்குகளுக்கு தடை நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. மேலும் பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் போன்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. நோய் பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்தது. மக்கள் ஊரடங்கை பொருட்படுத்தாமல் சாலைகளில் தேவையின்றி சுற்றி திரிந்தனர். அதனால் நோய்த்தொற்று குறையவில்லை. மேலும் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கை அறிவித்தது. அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.
சில்லறை மற்றும் மொத்த வர்த்தக விற்பனையாளர்கள் கவனத்திற்கு – MSME ல் சேர்ப்பு!
அதன் பிறகு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதன் விளைவாக கொரோனா பரவல் சற்று குறைந்தது. தமிழகத்தின் சில மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவு பாதிப்புகள் குறையவில்லை. அதனை கொரோனா பாதிப்பு விகித அடிப்படையில் மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. ஜூன் 14 முதல் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. முடி திருத்தும் கடைகள், நகை, ஜவுளி கடைகள், வாகனங்கள் விற்கும் கடைகள், பழுது பார்க்கும் கடைகள், காலணிகள் விற்கும் கடைகள், தேநீர் கடைகள், போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் பேருந்து சேவையும் தொடங்கியுள்ளது. நேற்று மீண்டும் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதில் திரை அரங்குகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் திரை உலகினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா குறைந்த பிறகு இனி வரும் காலங்களில் வரும் தளர்வுகளில் திரை அரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்க அனுமதி வழங்கப்படும் என திரையரங்க உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் ஆகஸ்ட் மாதம் முதல் திரையரங்குகள் திறக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.