சில்லறை மற்றும் மொத்த வர்த்தக விற்பனையாளர்கள் கவனத்திற்கு – MSME ல் சேர்ப்பு!
எம்எஸ்எம்இ நிலையில் இருந்து சில்லறை மற்றும் மொத்த வர்த்தகம் கடந்த 2017 ஆம் ஆண்டில் நீக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் எம்எஸ்எம்இ நிலையில் இணைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எம்எஸ்எம்இ:
கடந்த 2017 ஆம் ஆண்டில் எம்எஸ்எம்இ பிரிவில் இருந்து சில்லறை மற்றும் மொத்த வர்த்தகர்களை மத்திய அரசு நீக்கியது. இதனால் எம்எஸ்எம்இ துறைக்கு வழங்கப்படும் கடன்கள், முன்னுரிமை துறை கடன்களுக்கு கீழ் வருவதால் அவை சில்லறை மற்றும் மொத்த வர்த்தகர்களுக்கு மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டில் பறிக்கப்பட்ட சில்லறை மற்றும் மொத்த வர்த்தகர்களுக்கான எம்எஸ்எம்இ நிலையை மீட்டெடுக்குமாறு ஆகிய இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கடந்த 2021 மார்ச் மாதத்தில் கோரிக்கை விடுத்தனர்.
வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க உள்ளோர் கவனத்திற்கு – வட்டி விகித மாற்றங்கள்!
இதனை தொடர்ந்து சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் வர்த்தகர்களுக்கு எம்எஸ்எம்இ நிலையை மீட்டெடுக்க மத்திய அரசுடன் பிரதிநிதித்துவப்படுத்தியது. இதன் காரணமாக தற்போது மீண்டும் எம்எஸ்எம்இ நிலையில் சில்லறை மற்றும் மொத்த வர்த்தகர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று நேற்று (ஜூலை 2) அறிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் படி முன்னுரிமை கடன்கள் வழங்குதல் பயன்களையும் சில்லறை மற்றும் மொத்த வர்த்தகர்கள் பெறுவார்கள் என்று எம்எஸ்எம்இ அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இதனால் சுமார் 2.5 கோடி சில்லறை மற்றும் மொத்த வர்த்தகர்கள் பயன் பெறுவார்கள் என்றும் மத்திய அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்ததாவது, சில்லறை மற்றும் மொத்த வர்த்தகத்தை எம்எஸ்எம்இ நிலையில் சேர்ப்பதற்கான முக்கிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இது வர்த்தகர்களில் கோடி கணக்கானவர்களுக்கு எளிதாக நிதி மற்றும் பல்வேறு நன்மைகளைப் பெறலாம், அவர்களின் வணிகத்தை அதிகரிக்கவும் உதவும். மேலும் வர்த்தகர்களை மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.