TN TRB தமிழ் தகுத்தேர்வில் தேர்ச்சி கட்டாயம் – புதிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. பிற மாநிலத்தவர்கள் தேர்வில் கலந்து கொள்வதை கட்டுப்படுத்தும் விதத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
முக்கிய அறிவிப்பு
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும், அந்த வகையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. 24 மூத்த விரிவுரையாளர், 82 விரிவுரையாளர், 49 இளநிலை விரிவுரையாளர் என மொத்தம் 155 காலிப் பணியிடங்களுக்கு இந்த அறிவிப்பானது வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் இந்த பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என புது முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது, அதன் படி தமிழ் மொழியில் மொத்தம் 50 மதிப்பெண்களுக்கு 30 கேள்விகள் கேட்கப்படும். மேலும் தேர்வு நேரம் 30 நிமிடங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறைந்தபட்சம் 40%( 20 மதிப்பெண்கள்) எடுத்து தேர்ச்சி பெற வேண்டும். அப்போது தான் பிரதான விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – கணக்கை மாற்றிக்கொள்வது எப்படி?
Exams Daily Mobile App Download
அது மட்டுமில்லாமல் பகுதி ஆ பிரிவில், 150 மதிப்பெண்ணில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக எஸ்.சி. பிரிவினருக்கு 68 மதிப்பெண்ணும், எஸ்.டி. பிரிவினர் 60 மதிப்பெண்ணும், மற்ற பிரிவினருக்கு 75 மதிப்பெண் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு நடைபெறும் தேதி விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்