TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய முடிவுகள் வெளியீடு!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது நடப்பு மாதம் நடந்துள்ள தேர்வுகளுக்கான முடிவுகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்திற்கான தகுதி தேர்வை நடப்பு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி அன்று நடத்தியது. தேர்வுக்கு மொத்தம் 4004 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 2311 விண்ணப்பதாரர்கள் மட்டுமே எழுத்து தேர்வில் நேரடியாக கலந்து கொண்டனர். தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது எழுத்து தேர்வில் கலந்து கொண்ட அனைத்து விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்களையும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
எழுத்து தேர்வின் முடிவுகளில் இருந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலானது கல்லூரி கல்வி இயக்குனரகத்தால் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.