தமிழக தென்மாவட்ட மக்களுக்கு ரூ.1,000 & ரூ.6,000 நிவாரணத்தொகை – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் அண்மையில் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகை வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை தற்போது வெளியாகி உள்ளது.
நிவாரணத்தொகை:
தமிழகத்தில் டிசம்பர் மாத தொடக்கத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. அதே போல அண்மையில் பெய்த தொடர் கனமழை காரணமாக தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. வரலாறு காணாத அளவு பெய்த தொடர் மழையால் பொதுமக்கள் தங்களது உடைமைகளையும்,உறவினர்களையும் இழந்து தவித்தனர்.
இத்தகைய சூழலில் தமிழக அரசு தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் சுமார் 6,63,790 குடும்பங்களுக்கு ரூ.6000 நிவாரணத்தொகையும் அதே போல கன்னியாகுமரியில் பாதிக்கப்பட்ட 14,31,164 குடும்பங்களுக்கு ரூ.1000 நிவாரணத்தொகையும் வழங்கப்படும் என அறிவித்தது. தற்போது நிவாரணத் தொகைக்காண அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.