TN TRB ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு – தீவிர கட்டுப்பாடுகளுடன் தொடக்கம்!
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் பின்பற்றப்பட்ட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பற்றி பார்க்கலாம்.
ஆசிரியர் தகுதித் தேர்வு
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தகுதித் தேர்வு ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அத்துடன் இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அரசு ஆசிரியராக பணியாற்ற முடியும். தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் சூடுபிடிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – பணப்பட்டுவாடாவில் களமிறங்கிய கட்சிகள்!
தற்போது பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்தில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளதால் அதனை நிரப்ப உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதன்படி இதற்கான தேர்வுக்கால அட்டவணையை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் ஐந்து மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடங்கியது. இதில் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் நிலை-1, கணினி ஆசிரியர் நிலை-1க்கான ஆசிரியர் தகுதி தேர்வு உள்ளிட்ட பணியிடத்திற்கு தேர்வு நடத்தப்பட்டது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி – கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்!
ஈரோட்டில் செங்குந்தர் இன்ஜினியரிங் கல்லூரி துடுப்பதி, காமதேனு கலை அறிவியல் கல்லூரி சத்தியமங்கலம், கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி பெருந்துறை, வேளாளர் இன்ஜினியரிங் கல்லூரி திண்டல் மற்றும் வி.இ.டி. கலை அறிவியல் கல்லூரி திண்டல் உள்ளிட்ட 5 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் 1,100 பேர் தேர்வு எழுதினார்கள். மேலும் கொரோனா பரவி வருவதால் ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. அதனால் இத்தேர்வில் கலந்து கொள்பவர்கள் கம்ப்யூட்டர் முன் நிற்க வைத்து, முகத்தை ஸ்கேன் செய்தபின் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வாணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.