தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி – கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் தரமற்ற பொருட்களை வழங்கியதாக கூறி பொதுமக்கள் வாங்குவதில் ஈடுபட்டனர். பொருட்களின் அளவும் சரியாக இல்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
ரேஷன் கடை:
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகிய 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது.
மாநிலத்தில் பள்ளிகளை சுற்றிலும் 144 தடை உத்தரவு அமல் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், தரமற்ற பொருட்களை வழங்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. அரிசி வெல்லம் போன்ற பொருட்கள் மக்கள் பயன்படுத்தும் பக்குவத்தில் இல்லை என்று பொது மக்கள் கூறினர். அதனை தொடர்ந்து தற்போது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் இம்மாதம் வழங்கப்பட்ட பொருட்களில் புழு, வண்டுகள், எலி கழிவுகள், கோழி இறகுகள் உள்ளிட்டவை இருந்ததாக ரேஷன் அட்டைதாரர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல் – பெற்றோர்கள் கோரிக்கை!
இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நியாய விலைக் கடையில் வழங்கப்படும் பொருட்களின் அளவும் குறைவாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். தரமற்ற அரிசியை நியாய விலைக் கடையில் வழங்குகின்றனர். ஏன் என்று கேள்வி எழுப்பினால் விருப்பம் இருந்தால் வாங்கி செல்லுங்கள் என்று கடை ஊழியர் பதிலளிக்கின்றனர் என்று பொதுமக்கள் கூறினர். நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வாங்குபவர்களும் மனிதர்கள் தான். அதை மனதில் வைத்துக் கொண்டு தரமான பொருட்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.