TN TRB தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ் – தொலைதூரங்களில் மையம் ஒதுக்கீடு! தேர்வெழுதுவதில் சிக்கல்!
தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு எழுதுவோருக்கு தேர்வு மையங்கள் தொலைதூரத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் தாமதமாக வந்த தேர்வர்கள் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் விண்ணப்பதாரர்கள் தேர்வெழுத முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.
விரிவுரையாளர் தேர்வு:
தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள் தகுதித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக தேர்வுகள் நடத்தப்படவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்தது. இதையடுத்து அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – தயார் நிலையில் கரும்புகள்!
இதற்கான விண்ணப்ப பதிவுகளும் முடிவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு விண்ணப்ப பதிவு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் படி கடந்த 8ம் தேதி முதல் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வுக்கான மையங்கள் விண்ணப்பதாரர்களின் வசிப்பிடத்தில் இருந்து தொலை தூரங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் உரிய நேரத்தில் தேர்வெழுத முடியாததால் தேர்வர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் டிச.13 முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
கரூர் மாவட்டம் தளவாய் பாளையத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதால் திருச்சி, புதுக்கோட்டை, தேனி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொலைதூரத் தேர்வு மைய ஒதுக்கீடு பிரச்சனை காரணமாக தேர்வினை ஒத்திவைத்த நிலையில் மீண்டும் இரு வாரங்களில் அதேபோல் தொலைதூரத் தேர்வு மையங்களில் தேர்வினை நடத்தியது ஏன் என்று தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தொலைதூரத் தேர்வு மையம் ஒதுக்கியவர்களுக்கு மீண்டும் ஒரு முறை தேர்வெழுத வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.