தமிழகத்தில் டிச.13 முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் டிசம்பர் 13ம் தேதியான நாளை முதல் மதுரை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு கூடுதல் மற்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
புதிய கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பரவி வந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் மூலம் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தீவிர கட்டுப்பாடுகளின் விளைவினால் நோய் பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்ப தொடங்கிய சில மாதங்களில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா இரண்டாம் அலை பரவல் தொடங்கியது. முதல் அலை பரவலில் இருந்த பாதிப்பை விட இரண்டாம் அலையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டது. கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு மாநில அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
மேலும், நோய் தொற்றை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என்றும், அது குறித்த விழிப்புணர்வையும் அரசு மக்கள் மத்தியில் கொண்டு செல்ல பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் விளைவால் மக்கள் அதிக அளவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆரம்பித்தனர். இதனால் நோய் பரவல் குறைந்து வருகிறது. சமீப மாதங்களாக னாய் பரவல் பாதிப்புகள் குறைந்துள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், நோய் பரவல் பாதிப்பு நிலவரத்தை பொறுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க கொரோனா தடுப்பூசி கட்டாயம் – அறிவிப்பு வாபஸ்!
இந்நிலையில், கொரோனா வைரஸின் மாறுபாடு அடைந்த ஓமைக்ரான் தொற்று பரவல் அனைத்து இடங்களிலும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வகையானது கோவிட்-19 ஐ விட 10 மடங்கு வேகத்தில் அதிகம் பரவும் என்று விஞ்ஞானிகள் அறிவிப்பில் எச்சரித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது டிசம்பர் 13ம் தேதியான நாளை முதல் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அவர்கள், பொது இடங்களான திரையரங்குகள், திருமண நிகழ்ச்சி, மார்கெட் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.