தமிழகம் முழுவதும் தற்போது அதிகபட்ச வெயில் நிலவி வரும் நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்றைய வானிலை அறிக்கை நிலவரங்களை வெளியிட்டு உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் எந்தவிதமான மழைப்பொழிவும் பதிவு செய்யப்படவில்லை. சேலத்தில் அதிகபட்சமாக 38.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் குறைந்தபட்ச வெப்பநிலை 16.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மார்ச் 25ஆம் தேதியான இன்று முதல் 30-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் மார்ச் 31ஆம் தேதி அன்று தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை நிலவும் என்பதால் பொதுமக்கள் அசவுகரிய நிலையை உணரலாம். இதனால் தேவையான முன்னேற்பாடுகளை மக்கள் கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மீனவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்புகள் எதுவும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.