தமிழகத்தில் பள்ளிகள், அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு – முழு விவரம் இதோ!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இன்று (பிப்.19) ஒருநாள் மட்டும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான அரசு உத்தரவு தற்போது வெளியாகி இருக்கிறது.
விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் இன்று (பிப்.19) 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடை பெறுகிறது. தொடர்ந்து பிப்ரவரி 22ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இப்போது வாக்குபதிவின் போது மாலை 5 மணி முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாக்குகளை செலுத்துவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு பின் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பொதுமக்கள் அதிர்ச்சி!
தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக 1.33 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் சிசிடிவி கேமரா மற்றும் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக இன்று (பிப்.19) ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மார்ச் மாதத்தில் DA உயர்வு!
இது குறித்து சென்னை தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920ன்படி தேர்தல் நடைபெறும் நாளான இன்று (பிப்.19) தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்களது தொழிலாளர்களுக்கு இன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.