தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு பின் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் பணிகளால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் தேர்தலுக்கு பின் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மீண்டும் முழு ஊரடங்கு:
கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் இருந்து மக்கள் படிப்படியாக மீண்டு வருகின்றனர். கொரோனா மூன்றாம் அலை தாக்கத்திற்கு பின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருப்பதால் பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. கொரோனா மூன்றாம் அலையில் இருந்து பாதுக்காக்க ஜனவரி 6-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஜனவரி 9-ம் தேதி முதல் ஞாயிறு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.
TNPSC 5529 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு!
அதன் காரணமாகவே கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. கொரோனா பாதிப்பு குறைந்ததால் உள்ளாட்சி தேர்தல் 19 ஆம் தேதி நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனால் அமலில் இருந்த அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டது. இன்று (பிப்.19) காலை முதல் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மார்ச் மாதத்தில் DA உயர்வு!
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கடந்த மாதம் முதல் தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்றது. அதில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் வாக்கு பதிவின் போதும் மக்கள் கூட்டம் இருப்பதால் இனி வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் உள்ளாட்சி தேர்தலுக்கு பின் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.