ஆசிரியர்களுக்கு செக்… இனி லீவு கிடையாது – பள்ளிக்கல்விதுறையின் உத்தரவு!
தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் நீண்ட நாள் பள்ளிக்கு வராதவர்கள் விவரங்களை சேகரிக்குமாறு பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது தற்போது உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்களின் விவரம்:
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பாக குறிப்பிட்ட நாட்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு எடுத்துக் கொள்ளும் அனுமதி உண்டு. மேலும் ஏதேனும் அவசர விடுமுறை தேவைப்பட்டால் தலைமையாசிரியர்களிடம் விடுப்பு கடிதத்தை சமர்ப்பித்தும் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். இந்த நேரத்தில் பல ஆசிரியர்கள் முறையாக தகவல் அளிக்காமல் நீண்ட நாள் விடுப்பில் உள்ளது தெரிய வந்துள்ளது.
தமிழக காவல் நிலையங்களில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்த திட்டம் – முதல்வர் அறிவிப்பு!
குறைந்தபட்சம் ஒரு மாவட்டத்திற்கு 100 ஆசிரியர்களாவது தகவல் அளிக்காமல் நீண்ட நாள் விடுப்பு எடுத்து கொண்டு மாதந்தோறும் சம்பளம் மட்டும் பெற்று வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து அனுப்புமாறு பள்ளிக்கல்வி இயக்குனரகம் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.