தமிழக மாணவர்களுக்கு குஷி தான்.. அரையாண்டு விடுமுறை குறித்து பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!

0
தமிழக மாணவர்களுக்கு குஷி தான்.. அரையாண்டு விடுமுறை குறித்து பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!
தமிழக மாணவர்களுக்கு குஷி தான்.. அரையாண்டு விடுமுறை குறித்து பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!
தமிழக மாணவர்களுக்கு குஷி தான்.. அரையாண்டு விடுமுறை குறித்து பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!

தமிழக பள்ளி மாணவர்களுக்கு நாளை (டிச.24) முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

சிறப்பு வகுப்புகள்:

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு அதாவது இரண்டாம் பருவத்தேர்வு நடத்தப்படும். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு தேர்வு கடந்த 15ம் தேதி முதல் தொடங்கியது. இந்த வருடம் தேர்வானது மாவட்ட வாரியாக பொது வினாத்தாள் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

இந்த தேர்வு இன்றுடன் (டிச.23) முடிவடைய உள்ளது. அதன் பிறகு நாளை(டிச.24) முதல் 2023 ஜன.1 வரை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்து 2023 ஜனவரி 2 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பரவும் ஓமைக்ரான் XXB திரிபு – அச்சத்தில் உறைந்த மக்கள்..மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக தனியார் பள்ளிகளில் விடுமுறை நாட்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வர வைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். இதனை பள்ளி நிர்வாகம் செய்யக்கூடாது என்று தற்போது பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!