தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகளின் தேதி குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இறுதித் தேர்வு:
2023 – 24 ஆம் நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் வழக்கத்தை காட்டிலும் நடப்பாண்டில் முன்னதாகவே தொடங்க உள்ளது. நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள தேர்தல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகளை விரைவாக முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மேலும் 12 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து வருகிறது. ஏப்ரல் எட்டாம் தேதி வரையிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெறும்.
இதை செய்யாவிட்டால் சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும் – மார்ச் 31 கடைசி நாள்!
மேலும் ஏப்ரல் இரண்டாம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள் நடத்த உள்ளதாக அரசு தேர்வு அட்டவணைகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, ஏப்ரல் பதினோராம் தேதி அன்று ரமலான் பண்டிகை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஏப்ரல் 11ஆம் தேதி அன்று பிறை பார்க்கப்பட்டு 12ஆம் தேதி ரமலான் பண்டிகை வரும் பட்சத்தில் அன்றைய தேதியில் தமிழ்நாட்டில் நிச்சயமாக தேர்வுகள் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates