வருங்கால வைப்பு நிதி அமைப்பு வழங்கியுள்ள யுஏஎன் எண் மூலமாக குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாரிசுதாரர்களின் விவரங்களை இணைத்து பலன்களை பெறலாம்.
ஈபிஎஃப் பணியாளர்கள்:
வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பல்வேறு பயனாளிகள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் ஆன்லைன் பிஎஃப் மற்றும் ஓய்வூதிய பேமெண்ட்களுக்கு ஈபிஎஃப் பணியாளர்கள் இ-நாமினேஷன் செய்வது அவசியம் ஆகும். PF பயனாளிகள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வழங்கியுள்ள யுஏஎன் எண் மூலமாக குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாரிசுதாரர்களின் விவரங்களை ஈபிஎஃப் வாடிக்கையாளர்கள் அப்டேட் செய்தால் மட்டுமே அவர்களுக்கு இதன் பலன்கள் கிடைக்கும்.
மேலும் பயனாளர்கள் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ. 7 லட்சம் வரை காப்பீடும் இதன் மூலம் கிடைக்கிறது. மேலும் பயனர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப வாரிசுதாரரை நியமனம் செய்து கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாரிசுதாரரை இணைக்க சுய-சான்று ஒன்றே போதுமானது. வேலை வழங்கும் நிறுவனம் சார்பில், அதற்கு வேற ஆவணம் அல்லது ஒப்புதல் எதுவும் தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரமலான் பண்டிகை தினத்தில் தேர்வு? – அமைச்சர் தகவல்!