தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் பாலியல் வன்முறை காரணமாக மாணவிகளின் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து தமிழக பள்ளிகளில் புகார் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதற்கான நிதியினை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.
பாலியல் வன்கொடுமை
தமிழகத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் தொடர்ந்து மாணவிகளின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மாணவிகளை பாடம் கற்று கொடுக்கும் ஆசிரியர்களே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவது பெரும் அச்சத்தினை பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பல தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் புகார் பேட்டி வைக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி இருந்தார். அதனை செயல்படுத்தும் விதமாக அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? விரைவில் ஆலோசனை கூட்டம்! அமைச்சர் தகவல்!
தற்போது அனைத்து பள்ளிகளிலும் புகார் பேட்டி வைப்பதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆரோக்கிய நலனுக்காக இந்த கல்வியாண்டில் 37ஆயிரத்து 391 அரசுப் பள்ளிகளுக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் 7.47 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி பள்ளிகளில் சுகாதார நலனை பேணும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும் 1000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அனைத்து தமிழக பள்ளிகளிலும் தலைமையாசிரியர் தலைமையில் மாணவர் பாதுகாப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செவ்வாய் கிழமை (டிச.14) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
பள்ளிகளில் வைக்கப்படும் புகார் பெட்டிக்கு ‘மாணவர் மனசு’ என்று பெயரிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் அந்த பெட்டியை 15 நாட்களுக்கு ஒரு முறை திறந்து மாணவர்கள் அளித்துள்ள புகார்களை படித்து அதற்கு தக்க நடவடிக்கையினை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.