தமிழகத்தில் செவ்வாய் கிழமை (டிச.14) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் செவ்வாய் கிழமை (டிச.14) உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் செவ்வாய் கிழமை (டிச.14) உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் செவ்வாய் கிழமை (டிச.14) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு டிசம்பர் 14ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி மாவட்டத்தில் உள்ள, அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான கோவிலாகும். இக்கோயில் பக்தர்களால் திருவரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள கோபுரம் இந்தியாவில் மிக பெரிய ராஜ கோபுரமாகும். ஸ்ரீரங்கத்திற்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிகம் வருகை புரிவர். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் நடுவே தீவு போன்ற பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் மிகவும் பழமையானது. இத்திருக்கோயிலில் தமிழ் மாதமான மார்கழியில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்கவாசல் திறக்கப்படும்.

TN TRB தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ் – தொலைதூரங்களில் மையம் ஒதுக்கீடு! தேர்வெழுதுவதில் சிக்கல்!

இந்த நிகழ்வானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். சிறப்பு வாய்ந்த இவ்விழா பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியுள்ளது. இந்த வைகுண்ட ஏகாதசி தினத்தில் பக்தர்கள் விரதம் இருந்து கண்விழித்து பெருமாளை தரிசனம் செய்வர். இந்த விழா நாட்களில் பெருமாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இச்சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 14ம் தேதி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டிச.13 முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

அதன்படி காலை வைகுண்ட ஏகாதசி அன்று 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கபடவுள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி மாவட்டத்தில் உள்ள, அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும் என்றும் விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு 18 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!