தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? விரைவில் ஆலோசனை கூட்டம்! அமைச்சர் தகவல்!
இந்தியாவில் அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் பரவி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை மூடும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
பள்ளிகள் மூடல்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்ததை அடுத்து மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு முதல் கட்டமாக செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற தொடங்கியது. அதன் பிறகு தொடக்க மற்றும் நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நேரத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமெடுக்க தொடங்கியது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி சாலைகள் வெள்ளக்காடாக மாறியது.
தமிழகத்தில் செவ்வாய் கிழமை (டிச.14) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மழை நீர் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளை தொடர்ந்து பள்ளிகளிலும் தேங்கியது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது மழை குறைந்ததால் மீண்டும் பள்ளிகள் வழக்கம் போல நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று பரவி வருகிறது. இந்த உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று விரைவில் பரவ கூடிய தன்மை கொண்டது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
TN TRB தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ் – தொலைதூரங்களில் மையம் ஒதுக்கீடு! தேர்வெழுதுவதில் சிக்கல்!
மேலும் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் ஓமைக்ரான் பரவலாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இத்தகைய சூழலில் பள்ளிகளை மூடுவது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மீண்டும் பள்ளிகளை மூடும் நிலை ஏற்பட கூடும் என்று கூறப்படுகிறது.