தமிழக பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்த முக்கிய உத்தரவு – நெல்லை சம்பவம் எதிரொலி!
தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் பள்ளிக்கூடத்தின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டிடங்களை ஆய்வு மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் ஆய்வு:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து கடந்த மாதம் முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் வெளியிட்டுள்ளார்.
மாநில அரசின் கல்வித்துறையில் 53,7000 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்த மாணவர்கள் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து கழிப்பறையின் சுவர் அடித்தளம் சரியாக அமைக்கப்படாததால் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து அந்த பள்ளி தலைமையாசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
WIPRO நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள் – முக்கிய அறிவிப்பு!
இது போன்ற விபத்துகள் இனிமேல் தமிழகத்தில் நடப்பதை தவிர்க்கும் வகையில் அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இன்ஜினியர் மற்றும் சில கல்வி உயர் அதிகாரிகள் நியமித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த ஆய்வு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.