WIPRO நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள் – முக்கிய அறிவிப்பு!
நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ தற்போது அதிக அளவிலான நபர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இதனால் தகவல் தொடர்பு துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, அதிக இளைஞர்கள் பயனடைந்து வருகின்றனர்.
விப்ரோ வேலைவாய்ப்புகள்:
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் நாட்டில் அனைத்து தொழில்துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நிறுவனங்கள் மூடியிருந்ததால் பொருளாதார ரீதியாக சரிவை சந்தித்தது. இதனால் பல நிறுவனங்களும் ஊழியர்களை பணிநீக்கம் செய்தும், சம்பளத்தை குறைத்தும் நடவடிக்கைகளை எடுத்து வந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு நாட்டில் தகவல் தொழில்நுட்ப துறையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. சொல்லப்போனால், ஊரடங்கு காரணத்தினால் ஐடி துறையின் சேவை நாட்டில் அதிகமாக தேவைப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் DA அதிகரிப்பு? புத்தாண்டில் எதிர்பார்ப்பு!
இதனால் வழக்கத்தை விட ஐடி துறை நடப்பு நிதியாண்டில் அதீத வளர்ச்சியை அடைந்தது. வருமானமும் அதிகரித்து உள்ளதாக பல நிறுவனங்களும் வருவாய் அறிவிப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விப்ரோ நிறுவனம் தனது நிறுவனத்தில் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை தற்போது அறிவித்துள்ளது. நிறுவனத்தின் பங்கு விலையானது அதிகபட்சமாக தற்போது வரையில் 666.40 ரூபாயாகவும், இதே குறைந்தபட்சமாக 650.05 ரூபாயாகவும் உள்ளது. 52 வார உச்ச விலை 739.80 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலை 348.30 ரூபாயாகவும் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிக வாய்ப்புகளை அளிக்க முன்வந்துள்ளது.
SBI கிரெடிட் கார்டு வாங்கினால் ஸ்மார்ட் வாட்ச் இலவசம் – அதிரடி அறிவிப்பு!
பெங்களூர், புனே, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் அதிக வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் https://careers.wipro.com/opportunities/jobssortBy=posted_date&descending=true&page=1 என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக பெங்களூரு அலுவலகத்தில் IoT-Architect- என்ற பணிக்கு ஆட்கள் தேவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 5 – 8 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள், விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.