மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் DA அதிகரிப்பு? புத்தாண்டில் எதிர்பார்ப்பு!
கடந்த 3 தவணைக்கான மொத்த அகவிலைப்படி (DA) தொகை 31% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக 3% DA உயர்வு பற்றிய அறிவிப்பு வரவிருக்கும் புத்தாண்டில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
DA உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி (DA) தொகை 31% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து 7வது ஊதியக்குழுவின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான அடுத்த தவணையையும் சேர்த்து ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகை இன்னும் 3% உயர்த்தப்படும் என்றொரு தகவல் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு புத்தாண்டுக்கு முன்னதாக அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகலாம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
பழனியில் நாளை (டிச.18) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இப்போது இந்த தகவலின் படி, அரசு ஊழியர்களுக்கு மீண்டுமாக 3% DA தொகை உயர்த்தப்பட்டால், மொத்த அகவிலைப்படி தொகை 34% ஐ எட்டும். இதன் மூலம் 33 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த 2020ம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள DA நிலுவைத் தொகையை அரசு ஒரே தரப்பில் வழங்க வேண்டும் என்றும் ஊழியர் சங்கங்களின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
SBI கிரெடிட் கார்டு வாங்கினால் ஸ்மார்ட் வாட்ச் இலவசம் – அதிரடி அறிவிப்பு!
இது குறித்து இந்த மாதம் நடைபெற இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாரதிய ஓய்வூதியதாரர்கள் அமைப்பு (BMS) DA நிலுவைத் தொகை குறித்த உறுதியான முடிவை வெளியிடுமாறு பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் DA நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களுடன் சேர்த்து சுமார் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு இது புத்தாண்டு பரிசாக அமையக்கூடும்.