மாநில அரசின் கல்வித்துறையில் 53,7000 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் அறிவிப்பு!

0
மாநில அரசின் கல்வித்துறையில் 53,7000 காலிப்பணியிடங்கள் - அமைச்சர் அறிவிப்பு!
மாநில அரசின் கல்வித்துறையில் 53,7000 காலிப்பணியிடங்கள் - அமைச்சர் அறிவிப்பு!
மாநில அரசின் கல்வித்துறையில் 53,7000 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் அறிவிப்பு!

கர்நாடகா அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 53,700 ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

காலிப்பணியிடங்கள்:

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. தடுப்பூசிகள் மற்றும் அரசின் முயற்சியால் கொரோனா குறைந்து வந்ததை அடுத்து மாநில அரசுகள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறையும் திட்டமிட்டது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் படிப்படியாக ஒவ்வொரு மாநிலங்களும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட தடை – மாநகர காவல்துறை ஆலோசனை!

மற்ற மாநிலங்களை தொடர்ந்து கர்நாடகாவிலும் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி முதல் 9 – 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அக்டோபர் 25ம் தேதி 1 முதல் 5ம் வகுப்பு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் கர்நாடகாவில் அடுத்த தாக்குதலாக ஓமைக்ரான் தொற்று பரவி வருகிறது. அதனால் நேரடி வகுப்புகள் தொடர்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கர்நாடகா அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 53,700 ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் DA அதிகரிப்பு? புத்தாண்டில் எதிர்பார்ப்பு!

மேலும் அம்மாநிலத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகள் மற்றும் பியூ கல்லூரிகளில் மொத்தம் 53,700 ஆசிரியர், ஊழியர் காலிப்பணியிடங்கள் உள்ளது. அங்குள்ள ஆரம்ப பள்ளியில் 41,869 பணியிடங்கள், மேல்நிலைப் பள்ளியில் 8,292 பணியிடங்கள் மற்றும் பியூ கல்லூரியில் 3,292 பணியிடங்கள் காலியாக உள்ளது ஆரம்பப் பள்ளிகளில் 18,000, மேல்நிலைப் பள்ளிகளில் 5,076 பகுதி நேர ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் பணி தொடங்கியுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!