தமிழக பள்ளி & கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – ஆயத்த பணிகள் தொடக்கம்!
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கற்றல் மற்றும் தேர்வினை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு சுழற்சி முறை இன்றி வகுப்புகள் நடத்த அரசு முடிவு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயத்தப் பணிகள்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. பின்னர் மாணவர்களின் கற்றல் இழப்பை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் நேரடி வகுப்புகள் தொடங்கி பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
Post Office இல் Joint அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய தகவல்!
அவ்வாறு பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் என்று சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் கற்றல் இழப்பை சரிசெய்து தேர்வுகளுக்கு பாடங்களை விரைவில் நடத்தி முடிக்கும் விதமாக சுழற்சி முறை இன்றி தினசரி வகுப்புகள் நடத்த அரசு முடிவு செய்தது. அதனை தொடர்ந்து அதற்கான அரசாணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – வெல்லம் கொள்முதலில் சர்ச்சை!
அந்த வகையில் வரும் ஜன.3ம் தேதி முதல் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தினசரி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2 மாணவர்கள் மட்டுமே அமர்ந்திருந்த இருக்கையில் தற்போது 4 மாணவர்கள் அமர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய முடிவு பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கும், மே மாதத்தில் கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.