தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – வெல்லம் கொள்முதலில் சர்ச்சை!

0
தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 - வெல்லம் கொள்முதலில் சர்ச்சை!
தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 - வெல்லம் கொள்முதலில் சர்ச்சை!
தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – வெல்லம் கொள்முதலில் சர்ச்சை!

தமிழகத்தில் அடுத்த மாதம் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை விமர்சியாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு சார்பில் 20 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை வழங்குவது குறித்து முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு:

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை தை முதல் நாள் விமர்சியாக கொண்டாடப்படுகிறது. ஏழை எளிய மக்களும் பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் இலவச வேஷ்டி சேலைகள் மற்றும் பொங்கல் வைக்க தேவையான தொகுப்பு ஆகியவை வழங்குவது வழக்கம். இந்த ஆண்டும் 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வழக்கமாக பொங்கல் தொகுப்பில் சர்க்கரை தான் வழங்கப்பட்டு வந்தது.

தமிழகத்தில் நாளை (டிச.17) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

ஆனால் இந்த ஆண்டு, வெல்லம் உட்பட கரும்பு, பச்சரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொங்கல் பொருள்களும் சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் இருக்கும். அதனுடன் ஒரு துணிப்பை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே, 15 லட்சத்து, 48 ஆயிரத்து, 60 அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 1,088 கோடி ரூபாய் செலவில் இந்த பொருள்கள் வழங்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் வெல்லம் தயாரிப்பில் பெயர் போன சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசிற்கு தேவையான வெல்லம் வாங்க ஈரோடு மாவட்டம் சித்தோடு, கவுந்தப்பாடிக்கு வந்த தேர்வுக் குழுவினர், கடந்த வாரம் மாதிரிகளை வாங்கி தரம், விலை, தேவை குறித்து கேட்டறிந்தனர். ஆனால் தரமான கலப்படம் இல்லாத வெல்லம் இருந்தாலும் விலை காரணமாக அதை நிராகரித்துவிட்டு, மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம் மாநிலத்திற்கு சென்றுள்ளனர். அங்கே வெல்லம் வெள்ளை நிறமாக வருவதற்காக கெமிக்கல் சேர்ப்பதுடன், எடைக்காக மாவும் சேர்த்து வழங்கப்படுகிறது.

விராட் கோஹ்லி தலைமையில் தென் ஆப்ரிக்காவிற்கு பறந்த இந்திய அணி – ரசிகர்கள் உற்சாகம்!

தரமற்ற வெல்லத்தை வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்ய தமிழக அரசு ஆர்வம் காட்டுகிறது,. ஆனால் தமிழகத்தில் தரமான சுத்தமான வெல்லத்தை நிராகரிப்பது சரி இல்லை. தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டு வைத்திருப்போர் எண்ணிக்கைப்படி, 2.16 கோடி கிலோ வெல்லம் விற்பனை செய்தால் கரும்பு விவசாயிகள், வெல்லம் உற்பத்தியாளர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருக்கும். எனவே இது குறித்து முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!