தமிழகத்தில் நாளை (டிச.17) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (டிச.17) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (டிச.17) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (டிச.17) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக பல்வேறு பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் காரணமாக கொடுமுடி, பனையூர் ஆகிய பகுதிகளில் நாளை (டிச.17) மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. தற்போது மழைக்காலம் சாலைகளில் நீர் நிரம்பி வெள்ளப்பெருக்காக காணப்படுகிறது இதனால் மின் கம்பிகளில் பிளவு ஏற்பட்டு சாலைகளில் விழுந்தன. இதனால் ஏராளமான இடங்களில் தவிர்க்க முடியாத விபத்துகள் ஏற்படுகின்றன. ஆதலால் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக தமிழக அரசு மின் பராமரிப்பு பணிகளை முறையாக மாதந்தோறும் மேற்கொள்ள வேண்டும். அதனால் மின் வாரியம் மாதந்தோறும் மின்தடையை அறிவித்து பராமரிப்பு பணிகளை முறையாக கடைப்பிடித்து வருகிறது

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – பணிமாறுதல் கலந்தாய்வு! அமைச்சர் விளக்கம்!

அதனை தொடர்ந்து நாளை பனையூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக நாளை (டிச.17) காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மேலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான பனையூா், சொக்கநாதபுரம், அய்யனாா்புரம், பெரியாா் நகா், கல்லம்பல், சிலைமான், கீழடி ஆகிய பகுதிகளிலும் நாளை மின் விநியோகம் இருக்காது என்று மதுரை கிழக்கு மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் மு.ராஜாகாந்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.

நீலகிரியில் டிச.22 ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

அத்துடன் கொடுமுடி துணை மின் நிலையத்தில் நாளை வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் கொடுமுடி துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான கொடுமுடி, சாலைப்புதூா், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வடக்குமூா்த்திபாளையம், அரசம்பாளையம், சோளக்காளிபாளையம் மற்றும் நாகமநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளிலும் நாளை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!