Post Office இல் Joint அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய தகவல்!
நாடு முழுவதும் பெரும்பாலானோர் அஞ்சல் சேமிப்பு திட்டத்தை பாதுகாப்பானதாக கருதி தங்களது சேமிப்பை தொடங்கியுள்ளனர். அவ்வாறு உள்ள சேமிப்பில் இணைப்பு கணக்கு வைத்திருப்போருக்கு கணக்கு முடிவில் முதிர்வுத்தொகை எவ்வாறு வழங்கப்படும் என்பது குறித்த விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
இணைப்பு கணக்கு:
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சாரா அனைத்து ஊழியர்களும் தங்களது எதிர்கால தேவைக்கு பயன்படும் வகையில் சேமிப்பு கணக்கை தொடர்ந்து வருகின்றனர். சேமிப்பு கணக்கு தொடரும் அனைவரும் தங்களது பணத்திற்கான பாதுகாப்பு, நல்ல ரிட்டன்ஸ் மற்றும் வட்டி விகிதம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் முழுமையாக அறிந்து கொண்டு பின்னர் சேமிப்பு தொடங்குவது நல்லது. அந்த வகையில் அனைவராலும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் அஞ்சல் துறை சேமிப்பில் பெரும்பாலானோர் தங்களது சேமிப்பை தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் 2 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
அவ்வாறு சேமிப்பு தொடங்க திட்டமிடும் அனைவருக்கும் ஏற்ற வகையில் மத்திய அரசு பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது முதியவர்கள், நடுத்தர மக்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, ஆண் குழந்தைகள் சேமிப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் அஞ்சல் துறையின் கீழ் இயங்கி வருகின்றன. அந்த வகையில் நடைமுறையில் உள்ள தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் ஆகிய இரண்டிலும் இணைப்பு கணக்கு வசதி உள்ளது.
தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – வெல்லம் கொள்முதலில் சர்ச்சை!
அதன்படி இந்த இரண்டு திட்டங்களின் கீழ் அதிகபட்சமாக 3 பேர் வரை இணைப்பு கணக்கு தொடர முடியும். இத்திட்ட விதிமுறையின் A பிரிவில் இணைப்பு கணக்கில் உள்ள மூன்று பேருக்கு அல்லது கணக்கு உரிமையாளருக்கு ரிட்டன்ஸ் தொகை வழங்கப்படும். B பிரிவில் மூன்று பேரில் ஏதேனும் ஒருவருக்கு மட்டுமே ரிட்டன்ஸ் வழங்கப்படும். மேலும் இந்த பிரிவின் மூலம் கணக்கை ஒருவர் மட்டுமே கையாள முடியும் என்று தகவல் வெளியாகியது. சேமிப்பு கணக்கு தொடங்கும் அனைவரும் அந்த குறிப்பிட்ட திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்திருத்தல் அவசியம்.