தமிழக அரசானது ரேஷன் அட்டைதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியான அறிவிப்பு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரேஷன் கடை:
ரேஷன் கடைகளின் மூலமாக மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்ற உணவுப் பொருட்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டு மானிய விலையிலும், இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்திருக்கும் நபர்களுக்கான ஒப்புதல் கிடைக்கப்பட்டு விரைவில் ரேஷன் அட்டைகள் அச்சிடப்பட்டு வழங்க தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ரேஷன் பொருள்களை பெறுவதற்கு ரேஷன் கடை ஊழியர்கள் மக்களை பலமுறை அலைய விடுவதாக புகார்கள் அதிக அளவில் எழுந்தது.
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தற்போது கோடை வெயில் காலத்தில் மக்களை பலமுறை ரேஷன் கடைகளுக்கு பொருட்களை வாங்குவதற்கு அலைய வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. குடும்ப அட்டைதாரருக்கான நியமிக்கப்பட்ட பொருள்களை ஒரே முறையில் வழங்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனை சரி பார்ப்பதற்கு உணவு வழங்கல் துறை மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் தொடர்ந்து ரேஷன் கடைகளில் ஆய்வு பணிகளில் ஈடுபட்டிருப்பது குறிப்பிட தகுந்ததாகும்.