தமிழகத்தில் நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு – தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு! கலெக்டர் அதிரடி!

0
தமிழகத்தில் நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு - தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு! கலெக்டர் அதிரடி!
தமிழகத்தில் நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு - தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு! கலெக்டர் அதிரடி!
தமிழகத்தில் நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு – தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு! கலெக்டர் அதிரடி!

தமிழகத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவங்களின் பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகள்:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதனை தொடர்ந்து வரும் நவ-1ம் தேதி தொடக்கப்பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் தீபாவளி பண்டிகை நவ-4ம் தேதி கொண்டாட இருப்பதால் பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறக்க கோரி பல்வேறு தரப்பினர் அறிவுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே காலம் கடந்து விட்டதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பது உறுதி என கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதனால் பள்ளிகள் அனைத்திலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நாளை 27,000 உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்பு – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

மேலும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்குமாறு அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதனை அனைவரும் செயல்படுத்தி இருக்கின்றனரா என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வானது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனை தொடர்ந்து இன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியின் 425 வாகனங்கள் இன்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது அரசு விதிமுறைகளின் படி வாகனங்கள் சரிவர இயங்குகின்றனவா, முதலுதவி பெட்டிகள் மற்றும் பயர் சேப்டி கருவிகள் உள்ளனவா என்றும் சரிபார்க்கப்பட்டன.

தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடை – உரிமம் பெற கால அவகாசம் நீட்டிப்பு!

மேலும் வாகனத்தின் தரம், இயக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்தும் சோதனை நடத்தப்பட்டது. ஆய்வுக்கு பின்னர் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில் இதுவரை 425 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் தரம் சரியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பள்ளி வாகனங்களை ஓட்டினால் அதன் ஓட்டுனர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். நவம்பர் 1 ஆம் தேதி அன்று 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி பள்ளி வாகனங்களை அதிரடியாக ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!