தமிழகத்தில் நாளை 27,000 உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்பு – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் 9 திருப்பத்தூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தினங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 27,000 உள்ளாட்சி பிரதிநிதிகள் நாளை (20.10.2021) பதவியேற்கவுள்ளனர்.
பதவியேற்பு:
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் அரசின் நிர்வாக காரணங்களுக்காக பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, உள்ளிட்ட 9 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கும் வார்டு வரையறை செய்யப்படவில்லை அதனால் அப்போது இந்த 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. அதன் பிறகு 2021 அக்டோபர் மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடை – உரிமம் பெற கால அவகாசம் நீட்டிப்பு!
இதையடுத்து , மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த தேவையான பணிகளை மேற்கொள்ள தொடங்கியது. முன்னேற்பாடு பணிகளுடன் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தினங்களும் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதன் தொடர்ச்சியாக 12ம் தேதி உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு வெற்றி பெற பிரதிநிதிகளுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் சான்றிதழ்களையும் வழங்கினர்.
1 – 8 ம் வகுப்புகளுக்கு நவ.8 முதல் பள்ளிகள் திறப்பு? கல்வித்துறை ஆலோசனை!
இந்நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 27,792 உள்ளாட்சி பிரதிநிதிகள் அந்தந்த மாவட்ட ஊராட்சிகளில் நாளை (20.10.2021) பதவியேற்க உள்ளனர். பதவியேற்பு விழாவை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராம அலுவலகங்கள், வார்டுகள் போன்றவற்றில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது. பதவியேற்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வருகிற 22ம் தேதி நடக்கும் மறைமுக தேர்தலில் வாக்களிப்பர். மேலும் நாளை பதவி ஏற்காதவர்கள் 22ம் தேதி மறைமுக தேர்தலுக்கு முன்பு பதவியேற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.