தமிழக பள்ளி கட்டிடங்களுக்கான அனுமதி – உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிக் கட்டிடங்களின் திட்ட அனுமதியை சமர்ப்பிக்க கோரி அண்மையில் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தனியார் பள்ளிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
தனியார் பள்ளிகள்:
தமிழகத்தில் 2022- 2023 ஆம் கல்வியாண்டுக்கான அங்கீகாரத்தை புதுப்பிக்க கோரும் தனியார் பள்ளிகள் கட்டிடத்தின் அனுமதி அல்லது அனுமதி கோர வேண்டி அளித்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. இந்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்ய வேண்டும் என கூறி தனியார் பள்ளிகள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
Follow our Instagram for more Latest Updates
இந்த வழக்கு விசாரணையின் போது 2011-க்கு முன் கட்டப்பட்ட தனியார் பள்ளிக்கட்டிடங்களின் திட்ட அனுமதியில் குறைகள் இருப்பின் அது குறித்து துறை இயக்குனருக்கு விண்ணப்பித்து சரி செய்ய வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மேலும் 2011-ம் ஆண்டுக்கு பின்பு கட்டப்பட்ட பள்ளி, கல்லூரி கட்டிடங்களுக்கு அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்று தான் கட்டப்பட்டுள்ளது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
தமிழகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை – நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் அளித்த பதில்!
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் 2011ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தற்போது பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்கள் கட்டியிருந்தால் அதற்கு கட்டாயம் திட்ட அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. பள்ளியின் அங்கீகாரத்தை புதுப்பிக்க உரிய ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.