தமிழகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை – நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் அளித்த பதில்!

0
தமிழகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை - நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் அளித்த பதில்!
தமிழகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை - நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் அளித்த பதில்!
தமிழகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை – நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் அளித்த பதில்!

தமிழகத்தில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கு விசாரணையில் டாஸ்மாக் நிர்வாகம் தனது முடிவை கூறியுள்ளது.

பிளாஸ்டிக் மது பாட்டில்:

தமிழகத்தில் மது கண்ணாடி பாட்டில்களில் தான் விற்கப்பட்டு வருகிறது. தினமும் சுமார் 10 லட்சம் பாட்டில்கள் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எப்போதும் மது பிரியர்கள் மது அருந்தியவுடன் காலி பாட்டில்களை பொது இடங்களில் தூக்கி எரிகின்றனர். நாம் தினமும் செல்லும் சாலைகளிலேயே ஏராளமான காலி மதுபாட்டில்களை பார்த்திருப்போம். இந்த நிலையில் நீலகிரி மாவட்ட வன பகுதி மற்றும் அம்மாவட்டத்தின் சுற்றுலா தளங்களில் அதிக எண்ணிக்கையில் காலி மதுப்பாட்டில்கள் கிடப்பது கண்டறியப்பட்டது.

Exams Daily Mobile App Download

இதனால் வன விலங்குகள் பாதிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். அத்துடன் உடைத்த கண்ணாடி மதுபாட்டில்களை கையில் எடுத்து சுத்தம் செய்யும் போது தூய்மை பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சில நேரங்களில் காயங்கள் ஏற்படுகிறது என்றனர். அதனால் நீலகிரி மாவட்ட டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களை திரும்ப பெறும் முயற்சி சோதனை முறையில் நடைபெற்றது. இந்த மது பாட்டில்களை திரும்ப பெறுவதில் டாஸ்மாக் ஊழியர்கள் பல இன்னல்களை சந்திப்பதாகவும், அவர்களின் வேலை பளு அதிகரிப்பதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது.

பொதுமக்கள் கவனத்திற்கு.. நவம்பர் 8 (செவ்வாய்க்கிழமை) வங்கிகளுக்கு விடுமுறை? – முழு விவரம் உள்ளே!

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய கோரிக்கை எழுந்தது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுவை விற்கும் முடிவு எங்களிடம் இல்லை என்று டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் கண்ணாடி பாட்டில்களில் மதுவை விற்றால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். அதனை தொடர்ந்து மது பாட்டில்களை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள சுமார் 5 லட்ச தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!