தமிழகத்தில் நாளை (ஏப்.25) மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு.. உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கானு பாருங்க!
மதுரை மாவட்டத்தில் நாளை துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் கடந்த வாரம் வரை 10 ,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வந்ததால் மின்தடை ஏதும் செய்யப்படவில்லை. தற்போது தேர்வுகள் முடிவடைந்துள்ளதையடுத்து அனைத்து துணை மின் நிலையங்களிலும் படிப்படியாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அந்த வகையில் நாளை (ஏப்.25) அழகர் கோவில் மற்றும் அருள்தாஸ் புரம் பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
உயர் ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பம் – EPFO முக்கிய அறிவிப்பு!
இதன் காரணமாக குறவன் குளம், குலசேகரன் கோட்டை, விராலிப்பட்டி, ராமையன்பட்டி, வேலம்மாள் பொறியியல் கல்லூரி,நாயக்கன்பட்டி, விவசாய கல்லூரி, கீழவளவு, கூச்சம்பட்டி, சனம்பட்டி, நரிமேடு பொய்க்கரைப்பட்டி, கள்ளந்திரி, நரசிங்கம், ஜெமினி பட்டி, ஆதனூர் பச்சை கட்டி, முருகன் கோவில், கோழி மேடு, வலையப்பட்டி, ஒத்தக்கடை, பாபா கோயில், கரையினை பட்டி, மேட்டுப்பட்டி, கோட்டைமேடு சொக்கலிங்கபுரம், பாலாஜி நகர், ராயல் கார்டன், மதகு அணை உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மின்னியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.