தமிழகத்தில் நவ.1 முதல் மழலையர் பள்ளிகள், அங்கன்வாடிகள் திறப்பு – அரசு உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் மழலையர், நர்சரி பள்ளிகளை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அரசு வெளியிடப்பட்டு உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா 2வது அலைக்கு மத்தியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் பல்வேறு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அக்டோபர் 14 முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விளையாட்டுப் பள்ளிகள், மழலையர் பள்ளி வகுப்புகள் மற்றும் அங்கன்வாடிகள் நவம்பர் 1 முதல் மாநிலம் முழுவதும் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.
தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்க்கு அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க
விளையாட்டுப் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளி வகுப்புகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும், தொழிலாளர்களும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். கல்வி நிலையங்கள் மற்றும் அரசு மற்றும் தனியாரால் ஏற்பாடு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் இன்று (அக் 14) முதல் செயல்பட அனுமதிக்கப்படும். இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல் துறை டிஎஸ்பி சி. சைலேந்திர பாபு, நிதிச் செயலாளர் எஸ். ககன்தீப் சிங் பேடி, சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சமய அறநிலையத் துறை செயலாளர் பி. சந்திர மோகன் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு – பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு!
தமிழகத்தில் ஏற்கனவே நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் கூடுதலாக மழலையர், நர்சரி மற்றும் அங்கன்வாடிகளையும் திறக்க அனுமதி கிடைத்துள்ளது. நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், பள்ளிகள் திறப்பை சில நாட்கள் தள்ளிவைக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.