தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு – பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு!
தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு பள்ளிகளில் மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை மாணவர் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு பதிவு:
தமிழகத்தில் படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு என்பது முக்கியமான ஒன்றாகும். 10-ம் வகுப்பு முடித்தவுடன் இத்தகைய பதிவானது மேற்கொள்ள வேண்டும். ஒருமுறை register செய்தால் போதும். பின்னர் 12 மற்றும் டிகிரி என ஒவ்வொரு படிப்பிற்கும் renewal மட்டும் செய்தால் போதுமானது. இத்தகைய பதிவு வயது மூப்பு அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் அரசுப் பணியில் இடஒதுக்கீடு வழங்கப்படும். இத்தகைய பதிவானது முன்னர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் இத்தகைய பதிவானது மேற்கொள்ள மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். மாணவர்களின் நலன் கருதி 2009 முதல் மாணவர்கள் அவர்கள் 10-வது முடித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளுமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆதார் துறையில் மேலாளர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க
அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளிகளிலே வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளியிலே குறித்த நாட்களில் வேலைவாய்ப்பு பதிவு செய்துகொள்ளலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் ஜே.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கும் போது வேலைவாய்ப்பு அலுவலக பணிகள் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – இலவச தொலைபேசி எண் அறிவிப்பு!
எனவே மாணவர்கள் ஆதார் எண், குடும்ப அட்டை, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று கொண்டு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பதிவானது அக்-4 ம் தேதி முதல் அக்-18 தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவு பணிகள் நடைபெறும் 15 நாட்களிலும் பதியப்படும் பதிவுகளுக்கு பதிவு மூப்பு முதல் தேதியாக அதாவது, அக்-4 ம் தேதியே அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.