தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு – 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு நாளை முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வர உள்ளன. இதில் 27 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளை குறிப்பிட்ட நேரம் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நாளை (ஜூன் 14) முதல் மேலும் ஒரு வாரம் அதாவது ஜூன் 21 வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்து உள்ளார். இதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களை தவிர சென்னை உட்பட 27 மாவட்டங்களில் நாளை முதல் கூடுதல் தளர்வுகள் அமல்படுத்தப்பட உள்ளது.
ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
அதன்படி டாஸ்மாக் கடைகள் தினசரி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி அளித்துள்ள அரசு, குளிர்சாதன வசதியின்றி சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை திறக்கவும் அனுமதி வழங்கி உள்ளது. மொபைல்போன், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை செயல்படலாம். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை 20 சதவீத பணியாளர்களுடன் இயங்க அரசு அனுமதித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6.00 மணி முதல் காலை 9.00 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும் பொதுமக்களை அனுமதிக்கலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் முறையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.