ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா நோய்த்தொற்று பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு கோவா மாநில அரசு முழு ஊரடங்கு உத்தரவை ஜூன் 21 வரை நீட்டிப்பதாக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் 2வது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வருடம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டது. இதனால் இந்த முறை ஊரடங்கு கடைசி ஆயுதமாகவே பயன்படுத்தப்படும் என பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்தார். ஆனால் அந்தந்த மாநில அரசுகள் கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை விதிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட அனைத்து மாநில அரசுகளும் ஊரடங்கை அமல்படுத்தின.
ஜியோ (Jio) பயனர்களுக்கு தினசரி Unlimited டேட்டா திட்டங்கள் அறிமுகம்!
இதன் விளைவாக ஒட்டுமொத்த பாதிப்புகள் குறையத் தொடங்கியது. நாடு முழுவதும் தினசரி 4 லட்சம் வரை உறுதி செய்யப்பட்டு வந்த பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டிக்கலாம் என மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. தற்போது பல மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் வரிசையில் கோவா மாநில அரசு தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவினை ஜூன் 21 வரை நீட்டிப்பதாக அறிவித்து உள்ளது.
TN Job “FB Group” Join Now
இதில் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி சந்தைகள் உள்ளிட்ட கடைகள் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டு உள்ளது. 50 நபர்கள் வரை திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம். ஜூன் 21 ஆம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிடுவார்கள் எனவும் முதல்வர் அவர்கள் கூறி உள்ளார்.
IDBI வங்கி பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ATM, டெபாசிட், காசோலை கட்டண மாற்றம்!
கோவாவில் சனிக்கிழமையன்று 472 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,62,048 ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 2,914 ஐ எட்டியுள்ளது.