தமிழகத்தில் ஜூலை மாத மின்கட்டணம் தொடர்பாக குவியும் புகார்கள் – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் மின் நுகர்வோர்கள் ஜூலை மாதத்திற்கான மின் கட்டணத்தில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதிகமான மின் கட்டணம் செலுத்தியிருப்பதாகவும் எழுந்துள்ள புகார்களுக்கு மின்துறை அமைச்சர் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.
மின் கட்டணம்
கொரோனா 2 ஆம் அலை காரணமாக தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுமுடக்க காலத்தில் மின்துறை ஊழியர்கள் வீடுகள் தோறும் சென்று மின் கட்டண அளவீடுகளை மேற்கொள்ள முடியாததால், கடந்த மே 2019 ஆம் ஆண்டு செலுத்திய மின் கட்டண தொகையை அவர்கள் செலுத்த வேண்டும் எனவும் புதிய நுகர்வோர்கள் கடந்த மார்ச் மாத கட்டணத்தை செலுத்த வேண்டும் என மின்வாரியம் அறிவித்தது.
ஜூலை மாத இறுதியில் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – பட்டியல் இதோ!
இதையடுத்து ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை உள்ளிட்ட 4 மாதங்களில் நுகர்வோர்கள் உபயோகித்த மின் கட்டணத்தை மொத்தமாக கணக்கிட்டு, அதனை 2 பங்கீடுகளாக பிரித்து இலவச மின்சார அளவு கழிக்கப்பட்டு, மீதமுள்ள மின் கட்டணம் வழக்கம் போலவே வசூலிக்கப்படும் என்று மின்துறை தெரிவித்தது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் மின் கட்டணம் செலுத்திய நுகர்வோர்கள், நான்கு மாதங்களுக்கான மின் கணக்கீடுகளை செய்துள்ளதால் உபயோகத்தை விட அதிகளவு கட்டணம் வந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!
இந்த புகார்கள் குறித்து பதிலளித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘புகார் தெரிவித்த பயனரின் மின் இணைப்பு எண், முகவரி, மண்டலம் குறித்த தெளிவான தகவல்களை குறிப்பிட்டால் அதற்கான தீர்வு கிடைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மின் கட்டணம் அதிகமாக செலுத்தியவர்கள் தங்களது மின் இணைப்பு, முகவரி உள்ளிட்ட தகவல்களை கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.