சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூடும் வணிக வளாகங்கள், அங்காடிகள், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்க ஊரடங்கு அமலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா கண்காணிப்பு குழு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது உருமாறிய கொரோனா வைரஸ் என்பதால் இதன் வீரியம் அதிகரித்துள்ளது. அதனால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த அரசுகள் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டங்கள் தோறும் கொரோனா தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டு நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மருத்துவர், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் இரவு, பகல் பாராது தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராதிகா மீது கைவைக்கும் கோபி, கடுப்பான மயூரி – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோட்!
தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாநிலம் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த தொடர் முயற்சியால் தொற்று பரவல் தமிழகத்தில் குறைந்து வருகிறது. அதனால் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு மக்கள் மெல்ல திரும்பி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பொது இடங்களில் மக்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. சிலர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் வார விடுமுறை நாட்களில் தியாகராய நகர், புரசைவாக்கம், பாடி போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை எனவும் தகவல் வந்துள்ளது.
ஜூலை மாத இறுதியில் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – பட்டியல் இதோ!
இதனையடுத்து சென்னையில் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூடும் வணிக வளாகங்கள், அங்காடிகள், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்க ஊரடங்கு அமலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கண்காணிப்பு பனியின் போது விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் மொத்தமாக ரூ.5.43 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விதிமீறல் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.