தமிழக அரசு வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – மார்ச் 1 கடைசி நாள்!
தமிழகத்தில்,மயிலாடுதுறை மாவட்டத்தில் 2014 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் உங்கள் பதிவை புதுப்பித்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
முக்கிய அறிவிப்பு:
தமிழகத்தில் TNPSC நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் அரசு வேலைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். அதேபோல், ஒரு சில பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் நியமிக்கப்படுகின்றனர். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் வேலைவாய்ப்பு, பயிற்சிகள் போன்றவை வழங்கப்படுகிறது. இதற்கு பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். இந்த நிலையில் 2014, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகையும், 2017, 2018, மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலை வாய்ப்புக்கான பதிவை ஏற்கனவே புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்தது.
உக்ரைன், ரஷ்யா போரில் இந்திய பிரதமர் மோடி தலையிட்டு நிறுத்த வேண்டும் – உக்ரைன் தூதர் கோரிக்கை!
இருப்பினும் தமிழக அரசு, மேலும் 3 மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகையை வழங்கியுள்ளது. இந்த சலுகை, 2014 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் உங்கள் பதிவை புதுப்பித்திருக்க வேண்டிய காலம் 1.1.2014 முதல் 31.12.2019 வரை இருக்குமாயின் அந்த பதிவுதாரர்களுக்கு பொருந்தும்.இச்சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதள முகவரியை பயன்படுத்தி 1.3.2022-ஆம் தேதிக்குள் உங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மார்ச் 15 முதல் மதிய உணவு திட்டம் துவக்கம்!
அதற்கு பதிலாக பூம்புகார் சாலை, பாலாஜி நகர், 2வது குறுக்கு தெரு, மயிலாடுதுறை-609001 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு தங்கள் விண்ணப்பம் 1.3.2022-ஆம் தேதிக்குள் கிடைக்கப் பெறும் வகையில் பதிவஞ்சல் மூலம் விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் அல்லது 04364-299790 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளார்.