1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மார்ச் 15 முதல் மதிய உணவு திட்டம் துவக்கம்!

0
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மார்ச் 15 முதல் மதிய உணவு திட்டம் துவக்கம்!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மார்ச் 15 முதல் மதிய உணவு திட்டம் துவக்கம்!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மார்ச் 15 முதல் மதிய உணவு திட்டம் துவக்கம்!

கொரோனா 3ம் அலை பாதிப்புகளுக்கு பிறகு மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஜனவரி 24ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளிலும், வருகின்ற மார்ச் 15 முதல் மதிய உணவு திட்டம் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிய உணவு திட்டம்

வருகின்ற மார்ச் 15ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் மதிய உணவு திட்டத்தை மீண்டும் தொடங்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இம்மாநிலத்தில் கொரோனா தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட அனைத்து பள்ளிகளும் தற்போது வழக்கம் போல செயல்பட்டு வருவதால், மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை மீண்டும் தொடங்க பள்ளிக் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ‘கொரோனா நெறிமுறைக்கு இணங்க மார்ச் 15 முதல் பள்ளிகளில் சமைத்த உணவை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு – இன்னும் 4 நாட்கள் மட்டுமே!

இதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும். மகாராஷ்டிராவில் பள்ளிகள் முன்பே தொடங்கப்பட்டிருந்தாலும், கொரோனா பாதிப்புகள் இந்த மாத தொடக்கம் வரை நீடித்தது. தற்போது மாறி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்று மகாராஷ்டிரா பள்ளி கல்வி இயக்குனர் தினகர் தேம்கர் குறிப்பிட்டள்ளார். முன்னதாக கொரோனா 3ம் அலைபரவல் காரணமாக மூடப்பட்ட மஹாராஷ்டிரா பள்ளிகள் அனைத்தும் 1 முதல் 12வரையுள்ள வகுப்புகளுக்காக ஜனவரி 24 முதல் மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.24) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இதற்கிடையில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் வீழ்ச்சியை அடுத்து பீகார் மாநில அரசாங்கமும் பிப்ரவரி 28 முதல் பள்ளிகளில் மதிய உணவைத் தொடங்க முடிவு செய்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், பிப்ரவரி 28 முதல் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளில் மதிய உணவையும், ஆப்லைன் வகுப்புகளையும் தொடங்குவதை உறுதி செய்யுமாறு மாநிலக் கல்வித்துறை, பள்ளி நிர்வாகங்களை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், கொரோனா அறிவுறுத்தல்களைப் பின்பற்றாத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!