தமிழக மருத்துவமனையில் விரைவில் தணிக்கைக் குழு – அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு!

0
தமிழக மருத்துவமனையில் விரைவில் தணிக்கைக் குழு - அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு!
தமிழக மருத்துவமனையில் விரைவில் தணிக்கைக் குழு - அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு!
தமிழக மருத்துவமனையில் விரைவில் தணிக்கைக் குழு – அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு!

அறுவைச் சிகிச்சை நடவடிக்கைகளைக் கண்காணிக்க தமிழகத்தில் தணிக்கைக் குழு விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

தணிக்கைக் குழு:

சாமானிய மக்களுக்கான மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதில் அரசு மருத்துவமனை பெரும் பங்காற்றி வருகிறது. இருப்பினும் அவ்வப்போது ஏற்படும் சில தவறுகள் மக்களை அச்சத்துக்கு உள்ளாக்குகிறது. அரசு மருத்துவமனையில் சாதாரண காய்ச்சல் முதல் அறுவை சிகிச்சை வரை அனைத்திற்கும் திறமையான மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் மருத்துவ பிழை காரணமாக மகப்பேறு மரணங்கள், சிசு மரணங்கள் அவ்வப்போது நிகழ்கிறது.

Follow our Instagram for more Latest Updates

சமீபத்தில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா தவறான சிகிச்சையால் உயிரிழந்தது பெரும் பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது. இது பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. இதுபோன்ற அசம்பாவிதம் இனி மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அறுவைச் சிகிச்சை நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக குழுக்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ஆதார் எண் இணைப்பு அவசியம்? – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

Exams Daily Mobile App Download

அதுகுறித்து ஆலோசிக்கும் வகையில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் பொது அறுவை சிகிச்சை துறை தலைவா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் 23ம் தேதி நடைபெற உள்ளதாக கூறியுள்ளார். அதன்பின் அறுவை சிகிச்சைக்கு தணிக்கை அறிக்கை உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!