விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ஆதார் எண் இணைப்பு அவசியம்? – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!
விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்துக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தவறான பிரசாரம் பரவி வருவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இலவச மின்சாரத்துக்கு ஆதார் எண் இணைப்பு அவசியம்?
தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பல லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு வழங்கும் 100 யூனிட் மானியம் மின்சாரம், ஆதார் எண் இணைப்பு செய்யாவிடில் ரத்து செய்யப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இன்று (நவ. 21) மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!
Follow our Instagram for more Latest Updates
மேலும் அவர் நிர்வாக ரீதியில் ஆதார் எண் இணைப்பு என்பது ஒரு பணி எனவும், இதற்கும் விவசாயிகளுக்கு, விசைத்தறி நெசவாளர்களுக்கு, கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்துக்கு எந்த வித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்து உள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த ஆதாரமற்ற வதந்திக்கு யாரும் அச்சப்பட தேவை இல்லை என்றும், அமைச்சர் செந்தில்பாலாஜி கோவையில் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.