வேகமெடுக்கும் குரங்கு அம்மை நோய் பரவல் – சுகாதாரத்துறை அதிரடி தடுப்பு நடவடிக்கை!

0
வேகமெடுக்கும் குரங்கு அம்மை நோய் பரவல் - சுகாதாரத்துறை அதிரடி தடுப்பு நடவடிக்கை!
வேகமெடுக்கும் குரங்கு அம்மை நோய் பரவல் - சுகாதாரத்துறை அதிரடி தடுப்பு நடவடிக்கை!
வேகமெடுக்கும் குரங்கு அம்மை நோய் பரவல் – சுகாதாரத்துறை அதிரடி தடுப்பு நடவடிக்கை!

தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு பணியாக விமான நிலையத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பயணிகளுக்கு மாதிரிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை நோய்:

உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் முதன் முதலில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கியது. சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் விரைவாக பரவி பாதிப்பையும், உயிரிழப்பையும் அதிகப்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசுகளும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் விளைவாக பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. இதனையடுத்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நேரத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் பரவக்கூடிய குரங்கு அம்மை நோய் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி வருகிறது.

சென்னை: இன்று அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – ஒரு சவரன் ரூ.37,920க்கு விற்பனை!

அதனால் இந்தியாவில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து இது மனிதர்களுக்குப் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும் அடுத்த 2 முதல் 4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் வருபவர்களை கண்காணித்து உடனே தனிமைப்படுத்த வேண்டும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 21 நாட்களில் சென்று வந்தவர்கள், குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரை கண்காணிக்க வேண்டும். மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு இவர்களின் தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும். தலைவலி, தசை வலி மற்றும் சோர்வு ஆகிய அறிகுறிகளுடன் பயணிகளுக்கு மாதிரிகள் எடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!