செப்.,3 மா.சுப்பிரமணியன் டெல்லி பயணம் – எய்ம்ஸ் கட்டுமான பணி கோரிக்கை வலியுறுத்தல்!
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பல வித கோரிக்கைளை வலியுறுத்த செப்டம்பர் 3 ம் தேதி டெல்லி செல்கிறார்.
கோரிக்கைகள்:
தமிழகத்தில் மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. பிறகு 2019 ம் ஆண்டு ரூ.15 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசு சார்பில் மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கர் நிலம் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மருத்துவ மாணவர் சேர்க்கை, கட்டுமான பணிகள் பணிகள் தொடர்பாக வழக்குகளும் நடந்து வருகின்றது.
செப்டம்பர் 15 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!
விரைந்து கட்டுமான பணிகளை நடத்த வேண்டும் என்று பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. மதுரை உயர்நீதிமன்றம் இது குறித்த வழக்கில் 36 மாதங்களுக்குள்ளாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும், மத்திய அரசு பதிலளிக்கவுமுத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இன்று மத்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று தமிழகம் சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளார். கேரள மாநிலத்தின் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை டெல்லியில் நேரில் சென்று சந்திக்க உள்ளார். அந்த சந்திப்பின் போது, தமிழகத்திற்கு கூடுதலாக 2 கோடிகொரோனா தடுப்பு மருந்துகளை ஒதுக்கீடு செய்து வழங்கவும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும் கோரிக்கை வைக்க உள்ளார். இதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் செப்டம்பர் 3ம் தேதி டெல்லி பயணம் செய்ய இருக்கிறார்.