செப்டம்பர் 15 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக புதுவையில் செப்டம்பர் 15ம் தேதி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டும், தளர்வுகள் அளிக்கப்பட்டும் வருகின்றது. இருப்பினும் கொரோனா அதிகமாக உள்ள மாநிலங்களில் கூடுதலாக கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறந்து செயல்பட்டு வருகிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவின் தமிழக, கர்நாடகா எல்லைகளில் தீவிர கண்காணிப்பு – மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்!
இந்நிலையில், முன்னதாகவே கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருப்பினும் தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் அவ்வப்போது தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக புதுவை அரசு அறிவித்துள்ளது. இரவு 10.30 மணிக்கு முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அனைத்து வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், கடற்கரை சாலைகளில் இரவு 9 மணிவரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சுற்றுலா தலங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அரசியல், சமூக நிகழ்வுகள், பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு தடை தொடரும். இருப்பினும் காய்கறி, பழக்கடைகள் காலை 5 மணிமுதல் திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது போன்ற அரசு அறிவித்திருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.