தமிழக பள்ளி முதல்வர்கள் / தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் பள்ளிகள் வரும் 1ம் தேதி முதல் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளுக்கான சரிபார்ப்பு விவரங்களை கரூர் மாவட்ட கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார்.
சரிபார்ப்பு விவரங்கள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் முயற்சியாலும், மக்களின் போதிய ஒத்துழைப்பாலும் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நேரத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வரும் செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நியூஸிலாந்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – டெல்டா வைரஸ் பரவல்!
அதனை தொடர்ந்து பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய விவரங்களை வெளியிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
இதற்காக 41 கேள்விகளுடன் உள்ள படிவமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படிவத்தில் உள்ள அனைத்து விஷயங்களும் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து அதனை ஆவணமாக மாவட்ட கல்வி அலுவலகத்தில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அல்லது முதல்வர்கள் செப்டம்பர் 1ம் தேதிக்குள் பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.