நியூஸிலாந்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – டெல்டா வைரஸ் பரவல்!
உருமாறிய டெல்டா வகை வைரஸ் பரவலால் ஊரடங்கை மேலும் நீடிப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார்.
நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு :
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தலைவர்கள் தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வந்தனர். மேலும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி சில தளர்வுகளை அளித்து வந்தனர். இதையடுத்து நாடு முழுவதும் இந்த வைரஸ் முதல் அலையின் போது இருந்ததை விட தற்போது உருமாற்றம் அடைந்து “டெல்டா வைரஸ்” ஆக மாறி, வேகமாக பரவி வந்தது.
பெருநகர சென்னை மாநகராட்சி செய்தி வெளியீடு – தனியார் மருத்துவமனைகள் கவனத்திற்கு!
இதனை அடுத்து மீண்டும் ஊரடங்கை அனைத்து நாடுகளும் அறிவித்து வந்தன. தற்போது இந்த டெல்டா வகை வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால், மேலை நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா போன்ற இடங்களில் இன்னும் தாக்கம் குறையவில்லை. இதன் பாதிப்பு உலக நாடுகள் பலவற்றிற்கும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், நியூசிலாந்து நாட்டில் டெல்டா வைரஸ் பரவல் இன்னும் உச்சம் அடையவில்லை என்றும், அதனால், நியூசிலாந்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக வும் அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா கூறியுள்ளார். நியூசிலாந்தில் இதுவரை 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், டாப் 5 பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகள் இருப்பதும், இங்கெல்லாம் தொற்று பரவல் இருபது கோடியை தாண்டி உள்ளதாகவும் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.